Monday 19 April, 2010

பொதுக்குழு கூட்டம் 23-4-2010

கடையநல்லூர் முஸ்லிம் சமுதாய நண்பர்களுக்கு.


உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

வரும் வெள்ளிக்கிழமை 23-4-2010 அன்று மலை 6:30 மணியளவில் தேர, கோட்டைப்பள்ளியில் கிவா வின் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த (KIWA) அமைப்பின் வளர்ச்சிக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும்.
அமைப்பை வலுப்படுத்த அதன் நோக்கம், செயல் திட்டங்களை வடிவமைத்து விவாதிக்க வேண்டும்.
எனவே கடையநல்லூர் சகோதரர்களே தவறாது கலந்து கொள்ளுங்கள்.

கூட்டம் யாருக்கோ, எவருக்கோ என்று அலட்சியமாக இருந்துவிடாமல், சந்தா கொடுத்துவிட்டோம் என்று ஒதுங்கிகொள்ளாமல் உங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.
உங்களுடைய முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தந்து,
நமது ஊர்முஸ்லீம் சமுதாய ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நாம் ஒன்றுபட்டுபாடுபட அழைக்கிறோம்.
தெரியாத நண்பர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.
பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் நிர்வாகத்தில் பங்கெடுத்து உங்களுடைய ஒத்துழைப்புடன், எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் இந்த கிவா அமைப்பு வெற்றியடைய துஆ செய்யுமாறு வேண்டுகிறோம்.

நம் ஒன்றுபட வேண்டும்,
ஊர்விசயத்தில் அக்கறை கொள்ள வேண்டும்,
நமது குடும்பங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்,
ஏழை எளிய நமது சமுதயத்தவர்களுக்கு நாம் உதவிட வேண்டும்.
எனவே இம்மையின் சேவையில் மறுமையின் நன்மையை நாடி எல்லோரும் இந்த KIWA அமைப்பில் உறுப்பினர்களாக வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இப்படிக்கு

KIWA-UAE

e-mail: kiwa.uae@gmail.com

web : kiwauae.blogspot.com