Wednesday 3 November, 2010

இரத்த தானம் செய்வோம்

இரத்த தானம் செய்வோம்


”மூன்றில் (நோய்க்கான) நிவாரணம் உண்டு. 1) தேன் அருந்துவது 2)
இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது 3) தீயால்
சூடிட்டுக்கொள்வது. (எனினும்) தீயால் சூடிட்டுக்கொள்ள வேண்டாம் என என் சமுதாயத்துக்கு நான் தடைவிதிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)
புகாரியின் மற்றோர் அறிவிப்பில், தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும்
நிவாரணம் உள்ளது என்று வந்துள்ளது. நபிகளார் காலத்தில், உடலிலிருந்து
அதிகபட்ச இரத்தத்தை அதற்குரிய கருவியால் உறிஞ்சி வெளியேற்றிவிடுவது வழக்கம். அதற்காகவே தனிப்பட்ட முறையில் சிலர் இருந்துவந்தனர். அவ்வாறு இரத்தத்தை வெளியேற்றுவதில் நிவாரணமும் உடலுக்கு ஆரோக்கியமும் உள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆகவே, நம் உடலிலுள்ள உதிரத்தைக் குறிப்பிட்ட சில மாதங்களுக்குப்பின்
வெளியேற்றி இரத்ததானம் செய்வதால் நம் உடலுக்கு முற்றிலும் ஆரோக்கியமே என்பதை மேற்கண்ட நபிமொழி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் நபிகளார் காலத்தில், உறிஞ்சி வெளியேற்றப்பட்ட உதிரத்தை மண்ணில் புதைத்து
விடுவார்கள். ஆனால், விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள இன்றை
காலத்தில், அந்த உதிரம் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது.

உதிரத்தை உறிஞ்சி வெளியேற்றுவதில் உடலுக்கு ஆரோக்கியம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள அதே கருத்தை இன்றைய மருத்துவர்களும் கூறுகின்றனர்.
இரத்ததானம் (குறுதிக்கொடை) என்பது ஒருவர் தம் இரத்தத்தைப் பிறருக்குப்பயன்படும் வகையில் தயாள குணத்துடன் தானமாக வழங்கப்படுவதாகும். பொதுவாக, ஆரோக்கியமான ஒரு மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்ததானம் செய்வோரிடமிருந்து ஒரு நேரத்தில் 300 முதல் 350 மி.லி இரத்தமே
எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட இரத்தம் இரண்டு வாரங்களுக்குள் நாம் உண்ணும் சாதாரண உணவின் மூலமே மீண்டும் உற்பத்தியாகிவிடும். ஆக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நாம் இரத்ததானம் செய்யலாம். இதனால் நம் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதுமட்டுமல்ல, நம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாகி, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறையில் மனிதனுக்கு எவ்வாறெல்லாம் நன்மை உள்ளது என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Monday 1 November, 2010

காமராஜ் பல்கலை கல்லூரிகளில் இலவச பயிற்சிகள்

காமராஜ் பல்கலை கல்லூரிகளில் இலவச பயிற்சிகள்


மதுரை : ""மதுரை காமராஜ் பல்கலைகழக கல்லூரிகளில் இலவச பயிற்சி அளிக்கும் வகையில், 11 சமுதாயக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது,'' என, பல்கலை சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில், கட்டணமில்லாமல் ஆறுமாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி மற்றும் மேலூர் அரசுக் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங் பயிற்சி, பசுமலை சவுராஷ்டிரா கல்லூரி மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரிகளில் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றன. மதுரை பாத்திமா கல்லூரி மற்றும் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரிகளில் மொபைல்போன் பழுதுநீக்கும் பயிற்சி; பசுமலை மன்னர் கல்லூரி மற்றும் விருதுநகர் வன்னியப்பெருமாள் நாடார் கல்லூரிகளில் ஆட்டோமொபைல் மெக்கானிஸம் பயிற்சி; தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் பிரிட்ஜ், "ஏசி' பழுதுநீக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. மதுரை காமராஜ் பல்கலை கல்லூரியில் பிளம்பிங், வயரிங் பயிற்சி, ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் டெய்லரிங் பயிற்சி அளிக்கப்படுகின்றன. பயிற்சி குறித்து அந்தந்த கல்லூரி முதல்வர்களை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமியை, 0452 - 253 7838ல் தொடர்பு கொள்ளலாம்

(நன்றி S.Mohideen)

“Worries are dark room where negatives are developed “
Please consider the environment before printing this e-mail

பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர்களுக்கு சலுகைககள்

பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சலுகைககள்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல்.,நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல்.,பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல்.,நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “என் நண்பன் சூப்பர்’ என்ற பெயரில் கடந்த 7ம் தேதி முதல் சிம்கார்டு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பிளானில் இருந்து, ஒரு பி.எஸ்.என்.எல்.,லேண்ட் லைன் நம்பருக்கு முற்றிலும் இலவசமாக பேசலாம். மேலும் 30 பைசா கட்டணத்தில் 2 பி.எஸ்.என்.எல்.,நம்பரில் பேசலாம். ஒவ்வொரு மாதமும் 200 எஸ்.எம்.எஸ்.,இலவசமாக வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல்.,நெட்வொர்க்கிற்கு இரவு 11 மணி முதல் காலை 7 மணிவரை பேச ஒரு நிமிடத்திற்கு 20 பைசா மட்டுமே.பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர்களுக்கு 20 ரூபாய் மதிப்புள்ள சிம்கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் 46 ரூபாய் மதிப்புள்ள எப்.ஆர்.சி.,டாப் அப்மூலம் 180 நாட்கள் வேலிடிட்டியுடன் 10 ரூபாய் டாக்டைமும் பெற முடியும். இத்திட்டத்தில் தொடர்ந்து நீடிக்க ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 50 ரூபாய்க்கு டாப் அப் செய்ய வேண்டும்.பி.எஸ்.என்.எல்.,3ஜி டேட்டா கார்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக 275 ரூபாய், 440 ரூபாய், 716 ரூபாய்க்கான டேட்டா ரீசார்ஜ் விலை குறைக்கப்பட்டு 222 ரூபாய், 352 ரூபாய், 572 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மேலும் 2 ஆயிரத்து 756 ரூபாய்க்கு 3ஜி டேட்டா அன் லிமிடெட் விலை அதிரடி சலுகையாக ஆயிரத்து 499 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. 3ஜி டேட்டா கார்டு உடனடியாக பெற்றுக்கொள்ள நெல்லை பி.எஸ்.என்.எல்.,பொதுமேலாளர் அலுவலகத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம்.பொதுமக்கள் 3ஜி டேட்டா கார்டின் குறுகிய கால பயன்பாட்டிற்கு புதிய அறிமுக பேக் 10,25,50 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்.,3ஜி போஸ்ட்பெமிட் 519 ரூபாய்க்கும், 999 ரூபாய்க்கும், ஆயிரத்து 359 ரூபாய்க்கும் திட்டத்தின் மூலம் 19 மாதம் 10 மாதம், 7 மாதம் என 9 ஆயிரத்து 861 ரூபாயும், 9 ஆயிரத்து 920 ரூபாயும், 9 ஆயிரத்து 513 ரூபாயும் முன்பணம் மொத்தமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 3ஜி டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது.அனைத்து 2ஜி வாடிக்கையாளர்களுக்கும், வீடியோ கால் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 2ஜி சிம்கார்டை 3ஜி வசதியுள்ள மொபைலில் போட்டு யு.எம்.டி.எஸ்.,அல்லது ஆட்டோமேட்டிக் தேர்வு செய்தால் 3ஜி கவரேஜ் உள்ள இடங்களில் இந்த வசதி கிடைக்கும்.இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.