Monday 11 October, 2010

கடையநல்லூர் பேட்டை மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் பயான்...(கிவா)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாப்புகழும் சகல வல்லமை பொருந்திய அல்லாஹ்வுக்கே!!!!
10 -10 -10 ஞாயிறு அன்று மாலை 4 மணியளவில் கடையநல்லூர் பேட்டை மேல்நிலைப் பள்ளியில் கிவா (கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்பர் அசோசியேசன்) நடத்திய மாபெரும் மகளீர் மார்க்க விழிப்புணர்வு பயான் அல்லாஹுவின் பேரருளால் விமர்சையாகவும் மிக சிறப்பாகவும் நடந்து முடிந்தது. கூட்டத்திற்கு ஆர்வமுடன்
நானூருக்கும் மேற்ப்பட்ட பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆசிரியைகள் சகோதரி பாத்திமா மற்றும் பாத்திமா கனி கலந்து கொண்டு இஸ்லாம் கூறும் பெண்கள் ஒழுக்கம், குழந்தை வளர்ப்பு முறை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்திற்கு ஆதரவு தந்த பேட்டை, மதினநகர் ஜமாத்தார்கள், ஒத்துழைப்பு கொடுத்த சகோதரர்கள் மற்றும் கிவா உருப்பினர்கள் அனைவர்களுக்கும் கிவா நிர்வாகிகள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.