Wednesday 29 December, 2010

விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா?

ஒரு காலத்தில் மும்பை சென்று தங்கி பல நேர் காணல்களை(Inerview) சந்தித்து பெரும்பாடுப் பட்டு அரபு நாட்டு வேலைகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது.
அந்த நிலை மாறி விஜய(Visit) விசாவில் சென்றாலேப் போதும். வேலை வாய்ப்பு உறுதி என்கிற சூழல் துபை போன்ற நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.
விஜய(Visit) விசாவில் துபையில் முயற்சி செய்து உயர் பணிகளில் இருப்பவர்கள் ஏராளம். எப்படிப்பட்ட தயாரிப்போடு வந்தால் சிறந்த வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்கிற வழிகாட்டுதல்களை பலரும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
சமீப காலமாக துபையின் நிலைமை மாறி வருகிறது. அரசுத் துறைச் சார்ந்த செலவுகளில் துவங்கி செலவுகள் அனைத்தும் உயர்ந்த வண்ணம் உள்ளன. பள்ளி ஏழாம் வகுப்பு மாணவருக்கு ஆகும் ஒரு மாத செலவு ரூபாய்.11,000.00. நமதூரில் குடும்ப செலவை தாராளமாகப் பார்த்துவிடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக விண் நோக்கி சென்று கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட்! ஒரு வருடத்திற்கு தங்குமிடத்திற்கு ஆகும் செலவில் நம் தாய் மண்ணில் ஒரு சொத்து வாங்கி விடலாம்.
நாளுக்கு நாள் வெளி நாட்டவருக்கு எந்த விதத்திலும் அணுகூலமற்ற சட்ட திட்டங்களும், அனைத்து சூழ்நிலைகளும் மறைமுகமாக நம்மை நம் நாட்டிற்கு விரட்டுகின்றார்களோ என்றுதான் எண்ணத் தூண்டுகிறது.
சமீபத்தில் அனைத்து அரபக ஊடகங்களிலும் பிரபலமாகப் பேசப்பட்டு வரும் விசிட் விசா பிரச்சனையைப் பற்றித் தெரிந்துக் கொண்டால் விசிட் விசாவில் வரக் கூடியவர்கள் சற்று முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
* விசிட் விசாவில் வருபவர்கள் யாரும் Employment விசாவிற்கு மாறாமல் வேலை செய்வதும், வேலைக்கு அமர்த்துவதும் சட்ட விரோதமாகக் கருதப் படுகிறது. இருந்தாலும் இதுவரை அரசாங்கம் கண்டு கொள்ளாமல்தான் இருந்தது. ஆனால், தற்போது வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்திற்கு 50,000.00 திரஹம் (சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்)அபராதம், வேலை செய்பவருக்கு வாழ் நாள் முழுவதும் வர முடியாத (Life Ban) தடை என்று இந்த சட்டம் கடுமையாக பின்பற்றப் படுகிறது.
* விசிட் விசாவில் வந்து வேலைத் தேடுவதற்கு எந்தவித சட்ட சிக்கலும் இல்லை.புதிதாக விசிட் விசாவில் வர எண்ணுவோர் விசிட் விசாவில் இடப்படும் Profession Business Man என்று இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அப்படி Business Man என்று விசாவில் குறிப்பிடப்பட்ட ஒருவர் தக்க சான்றுகள் காண்பிக்க முடியாமல் அபுதாபி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றார்.
இன்றைக்கு உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியாவில் தொழில் துவங்குகின்றன. மிகப் பெரிய வேலை வாய்ப்பு சந்தையாக நம் தாய் மண் விரைவாக மாறி வருகிறது.
இளையத் தலைமுறையினர் முடிந்த அளவு இந்தியாவிலேயே நிறைவான ஊதியம் தரும் நிறுவனங்களில் வேலையில் சேர முயற்சி செய்யுங்கள். அதையும் மீறி வெளிநாட்டு ஆசை உங்களுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் வெளிநாட்டில் சம்பாதிக்கும் காலத்தை குறைவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள். போலித்தனமாக வாழ்கிறோமே என்று அன்றாடம் புலம்பிக் கொண்டிருக்கும் எண்ணற்ற அயல்நாடு வாழ் சகோதரர்களின் ஆவலுக்கேற்ப நீங்களாவது முழுமையான வாழ்வை நம் தாய் மண்ணில் சொந்த பந்தங்களுடன் வாழ்வதற்கு ஏதுவாக திட்டமிடுங்கள்.
நன்றி: கடையநல்லூர்.org

Friday 19 November, 2010

கிவா வின் இஸ்லாமிய மார்க்கப் பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்............................
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

துபாயில் 16-11-10 அன்று மாலை தியாகத்திருநாளை முன்னிட்டு தேரா கோட்டைப் பள்ளியில் கிவா வின் இஸ்லாமிய மார்க்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கடையநல்லூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர். தியாகத்தின் சிறப்புகளைப் பற்றி சகோதரர் முஜீப் ரஹ்மான் மற்றும் சகோதரர் முகமத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். செயலாளர் ராசப்பா, கிவா அமைப்பின் வளர்ச்சிப் பணிகளை விவரித்தார். தலைவர் அசன் கான், அமைப்பின் திட்டங்களை விளக்கி, கடையநல்லூர் சகோதரர்கள் எல்லோரும் இந்த அமைப்பில் இணைந்து நமதூர் சமுதாய நலனுக்காக ஒன்றுபட்டு பாடுபட கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது.
1) மதினாநகர் பள்ளி விரிவாக்க கட்டிடப்பணி மற்றும் பெண்கள் பள்ளி கட்டுவதற்காக நிதி கேட்டு கடிதம் வந்துள்ளது. எனவே இந்த பள்ளிப் பணிக்காக உதவி செய்ய விரும்புபவர்கள் சகோதரர் ரஹ்மானை தொடர்பு கொள்ளவும் (0507341448)
2) கடந்த வருடம் இதே காலகட்டத்தில் நமதூரில், அறியப்படாத மர்ம நோய் தாக்கப்பட்டு பல உயிர்கள் பலியாயின. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரி நமதூர் ஜமாஆத் தலைவர்கள் மற்றும் முனிசிபாலிட்டி நிர்வாகத்திடம் பேசப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு திவான் மக்தூம் வரவேற்ப்புரை வழங்கினார்.  கூட்டத்தில் மக்தூம், கரீம், மக்கட்டி ரபி, மைதீன், மீயகான், ரஹ்மான், ஜபார், ஷாஜஹான், அலி  மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். தலைவர் அசன் கானின் நன்றியுரையுடன் அல்லாஹுவின் பேரருளால் இக்கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

மரணத்தின் பின்பும் உனது நல்லமல் தொடர்ந்திருக்க வேண்டுமா?
மனிதன் மரணித்ததும் எல்லா நற்கருமங்களும் நின்றுவிடும் மூன்று காரியங்களைத் தவிர எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் (ஸதகத்துல் ஜாரியா எனும்) நன்மை தொடர்ந்திருக்கும் தர்மம், பிரயோஜனமளிக்கும் கல்வி, மரணித்தவருக்காக பிரார்த்திக்கும் பிள்ளை ஆகியவற்றை குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).

எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான். - நபி மொழி

உங்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் 4:32)

இன்சுலின் மருத்துவம்

உடலில் இன்சுலின் சுரப்பது மிகக் குறைந்த அளவில் உள்ளவர்களுக்கும், அறவே இன்சுலின் சுரப்பு இல்லாதவர்களுக்கும் இன்சுலின் மருந்தை ஊசியாகப் போடுவதால் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

இன்சுலின் வகைகள்
இன்சுலின் மருந்தில் பல வகைகள் உள்ளன. அவை உடலில் வேலை செய்யும் நேரத்தின் அளவைப் பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
அல்லது குறுகிய நேரம் வேலை செய்பவை (Short Acting Insulin)
அல்லது நடுத்தரமான நேரம் வேலை செய்பவை (Intermediate Acting Insulin)
அல்லது நீண்ட நேரம் வேலை செய்பவை (Long Acting Insulin)
இவை உடலில் வேலை செய்யும் நேரம் மட்டுமின்றி வேறு சில பண்புகளிலும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.
உடலில் செலுத்தி எவ்வளவு நேரத்தில் அதன் இயக்கம் துவங்குகிறது? (On self of time of action)
உச்சகட்ட அளவு இரத்தத்தில் எப்போது அடைகிறது? (Time of peak Plasma Concentration)
 எப்போது முற்றிலுமாக இரத்தத்திலிருந்து மறைகிறது?
இந்தப் பண்புகளின் அடிப்படையில் நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப, நோயின் தன்மை,தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் நீங்கள் எந்த வகை இன்சுலினை, எந்த அளவில் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வார்.
பெரும்பாலான நோயாளிகளுக்கும் குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினும், நடுத்தர நேரம் வேலை செய்யும் அல்லது நீண்ட நேரம் வேலை செய்யும் இன்சுலினும் சேர்த்துக் கொடுக்க வேண்டியதிருக்கும்.
குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலின்
அல்லது இதை கரையும் இன்சுலின் என்றும் அழைக்கிறார்கள்.
*நிறமற்ற,தெளிவானதிரவமாகஇருக்கும்.
* இது விரைவாக வேலை செய்யத் துவங்குவதால் உடனடியாக இரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். ஆனால், குறுகிய காலத்திற்கு மட்டுமே இது வேலை செய்வதால், ஒரு நாளில் குறைந்தது 2 முதல் 3 தடவைகள் இந்த ஊசி போட வேண்டியதிருக்கும்.
நடுத்தர நேரம் வேலை செய்யும் இன்சுலின்
* சாதாரண கரையும் இன்சுலினுடன் புரோட்டாமின் (PERTAMINA) என்ற ஒரு புரதத்தைச் சேர்த்து இவ்வகை இன்சுலின் தயாரிக்கப்படுகிறது.
* இது கலங்கிய நிலை திரவமாக (Cloudy Liquid) இருக்கும். இதில் இரண்டு வகை முக்கியமானவை.
* N.P.H.நியூட்ரல் புரோட்டாமின் ஹாகிடிரான் (Natural PERTAMINA Hoedowns)லென்டி இன்சுலின் (Lento Insulin)
* அல்ட்ரா லென்டியுடன் செமிலென்டி-யைச் சேர்த்து லென்டி இன்சுலின் செய்யப்படுகிறது.
* இந்த இரண்டுவகை இன்சுலினும் வேலை செய்யும் பண்புகளில் ஒரே வகையானவையே.
நீண்ட நேரம் வேலைசெய்யும் இன்சுலின்
* புரோட்டாமின் கிங் இன்சுலின், அல்ட்ரா லென்டி இன்சுலின் ஆகிய இருவகைகள் முக்கியமானவை.
* கட்டுப்பாட்டில் இருக்கும் நீரிழிவு நோய்க்கு வழக்கமாக இந்த வகை உபயோகிக்கப்படுவதில்லை.
குறுகிய & சுமாரானநேரம் வேலை செய்யும் இன்சுலின் கலவைகள்
(Pre Mixed Insulin)
இவ்வகைஇன்சுலின்கள்இப்போதுபிரபலமாகிவருகின்றன.
* குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினும், சுமாரான நேரம் வேலை செய்யும் இன்சுலினும் கலந்த கலவையாக இவை தயாரிக்கப்படுகின்றன.
அதனித்தனியே இவற்றை எடுத்துக் கலந்து போடும் போது அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும் சிரமத்தை இவை குறைக்கின்றன.
*நீரிழிவு நோய் நல்ல கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நோயாளிகளுக்கே இவ்வகை இன்சுலின்கள் பரிந்துரைக்கப்படும்.
எந்த நிலையில் இன்சுலின்பரிந்துரைக்கப்படும்?
* சிறுவயதினருக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோய்.
* நோயாளியின் எடை மிகக் குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகமாகவும் இருந்தால்.
* இரத்தத்தின் சர்க்கரை அளவு மிக அதிகமாகி கோமா நிலை தோன்றும் வாய்ப்பு உள்ள தருணங்களில்.
*பெரியஅறுவைசிகிச்சைகளுக்குமுன்.
*கர்ப்பகாலத்தில்.
*கோமாநிலையில்உள்ளவர்களுக்கு.
*மருந்து மாத்திரைகள், மருந்தில்லா முறைகள் மூலமாக சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத பட்சத்தில்.
இன்சுலின் போட்டுக் கொள்ளும் முறை
இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், தினமும் ஒருமுறை அல்லது இருமுறை,தங்கள் வாழ்நாள் முழுவதும் போட்டுக் கொள்ள வேண்டியதிருக்கலாம். அந்நிலையில் உள்ளவர்கள் ஊசியைப் போட்டுக் கொள்ள ஒவ்வொரு முறையும் இன்னொருவரைத் தேடுவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே தாங்களே ஊசி போட்டுக் கொள்ளப் பழகிக் கொள்வது நல்லது. மிகவும் தயக்கமாக இருந்தால், உங்களோடு எப்போதும் இருக்கும் ஒருவரை ஊசிபோட தயார் செய்து கொள்ளுங்கள்.
எவ்வாறு போடுவது என்பதை உங்கள் மருத்துவர் தெளிவாக விளக்கிச் சொல்வார். அடிப்படை முறையை இங்கே காணலாம்.
ஒருவகை இன்சுலின் மட்டும் உபயோகித்தல்
* உங்கள் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.
* இன்சுலின் பாட்டிலை உங்கள் கைகளுக்கிடையில் வைத்து மெதுவாக உருட்டுங்கள். (வேகமாக குலுக்க வேண்டாம்)
* இன்சுலின் சிரிஞ்சை எடுத்து, அதன் உட்குழாய் பகுதியை பின்னால் இழுத்து காற்றை சிரிஞ்சினுள் இழுக்கவும் (உங்களுக்கு எத்தனை யூனிட் இன்சுலின் எடுக்க வேண்டுமோ, அந்த அளவு வரை காற்றை இழுக்கவும்).
* ஊசியை இன்சுலின் பாட்டிலில் உள்ள ரப்பர் மூடிப்பகுதியில் குத்தி, சிரிஞ்சில் இழுத்த காற்றை பாட்டிலின் உள்ளே செலுத்துங்கள்.
* பாட்டிலை அப்படியே தலைகீழாகத் திருப்பி, மீண்டும் உள்குழாய் பகுதியை மெதுவாக கீழே இழுத்து உங்களுக்கு எத்தனை யூனிட் போட வேண்டுமோ அந்த யூனிட் அளவு வரை இன்சுலினை சிரிஞ்சில் நிரப்புங்கள்.
* சிரிஞ்சில் மருந்தோடு காற்று குமிழ்கள் கலந்திருந்தால், சிரிஞ்சை பக்கவாட்டில் மெதுவாக விரல்களால் தட்டுங்கள். குமிழ்கள் சிரிஞ்சின் மேல் பகுதியில் வந்து விடும். கவனமாக அவற்றை வெளியேற்றி விடுங்கள்.
* இப்போது இன்சுலின் தேவையான யூனிட்டுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் ஊசியை வெளியே எடுக்கலாம்.
* நீங்கள் உடலின் எந்தப் பகுதியில் ஊசியைப் போட்டுக் கொள்ளப் போகிறீர் களோ, அந்த இடத்தை சிறிது ஸ்பிரிட்டால் சுத்தம் செய்யுங்கள்.
* அந்த இடத்தில் உள்ள தோலை ஒரு கையின் கட்டை விரல் - சுட்டு விரல்களால் பிடித்துக் கொண்டு, மறு கையால் ஊசியை மெதுவாக உள்ளே செலுத்துங்கள்.
* உள்குழாயை மெதுவாகத் தள்ளி மருந்தை செலுத்திவிட்டு சிரிஞ்சை வெளியே எடுங்கள்.
* ஊசி போட்ட இடத்தை ஸ்பிரிட் தோய்த்த பஞ்சால் தடவி விடுங்கள்.
 ஒரு வகைக்கு மேற்பட்டஇன்சுலின் உபயோகித்தால்
* முதலில் சுமாரான நேரம் அல்லது நீண்ட நேரம் வேலை செய்யும் இன்சுலினை மேலே குறிப்பிட்ட முறைப்படி சிரிஞ்சில் எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின்னர் குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினை, தேவையான அளவுக்கு எடுத்துக் கொண்டு மேற்குறிப்பிட்டபடி உடலில் குத்திக் கொள்ளலாம்.
இன்சுலின் சிரிஞ்சுகள்
* இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்வதற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிரிஞ்சுகள் உள்ளன. இவற்றை இன்சுலின் சிரிஞ்சுகள் என்கிறோம்.
* பிற திரவ நிலை மருந்துகளை மி.லிட்டர் அளவில் அளவிடுகிறோம். ஆனால் இன்சுலின் மி.லிட்டர் அளவில் அளவிடப்படுவதில்லை.
* இன்சுலின் மருந்து `யூனிட்டுகள்'என்ற அலகையால் அளக்கப்படுகிறது.
* 40 இன்சுலின் யூனிட்டுகள் 1 மி.லி.
* இன்சுலின் சிரிஞ்சுகள் வெவ்வேறு கொள்ளளவுகளில் கிடைக்கின்றன.
* 30 யூனிட், 40 யூனிட், 50 யூனிட், 100 யூனிட் போன்ற அளவுகளில் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
* நீங்கள் ஒருமுறை உபயோகிக்கும் இன்சுலின் மருந்தின் அளவைப் பொறுத்து எத்தனை யூனிட் சிரிஞ்சு வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.
* நீங்கள் உபயோகிக்கும் அளவை விட சற்றே அதிகமான கொள்ளளவு உள்ள சிரிஞ்சை வாங்குவது நல்லது.
இன்சுலின் உபயோகிப்போருக்கான குறிப்புகள்
* இன்சுலின் மிகவும் சக்தி வாய்ந்தது. சற்றே அளவு அதிகமானாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக குறைந்து, `சர்க்கரை தாழ்நிலை' ஏற்பட்டு மயக்கம் வரலாம். எனவே எக்காரணம் கொண்டும் உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவை அதிகப்படுத்த வேண்டாம்.
* இரத்தத்தின் சர்க்கரை அளவு, சிறுநீரில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதா என்பதை அவ்வப்போது, பரிசோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.
*குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினுடன், நடுத்தர நேரம் வேலை செய்யும் இன்சுலினைச் சேர்த்து காலை, மாலை இருவேளையும் போட்டுக் கொள்ள வேண்டியதிருக்கும்.
அசிலருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே போட்டுக் கொண்டாலும் நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கலாம்.
*உங்கள் நோயின் தன்மை, தீவிரத்திற்கு ஏற்ப, எந்த அளவிற்கு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் கணக்கிட்டு உங்கள் மருத்துவர் இன்சுலின் ஒரு நாளில் எத்தனை முறை போட வேண்டும். எவ்வளவு அளவு போட வேண்டும் என்பதை முடிவு செய்வார்.
ஆரம்ப காலங்களில் மாடு,பன்றி போன்ற மிருகங்களின் கணையத்திலிருந்து இன்சுலின் பிரித்தெடுக்கப்பட்டது.
ஆனால் இவ்வகை இன்சுலின்களால் பலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.மேலும் பலரது உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்வகை இன்சுலின்கள் எல்லா பண்புகளிலும் ஏறக்குறைய மனித இன்சுலினை ஒத்திருப்பதால் ஒவ்வாமை, இன்சுலின் எதிர்ப்பு நிலை போன்றவை தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு.
சில பாக்டீரியாக்களில் அல்லது ஈஸ்ட் செல்களின் உள்ளே இன்சுலின் சுரக்கச் செய்யும் மரபணுக்களைச் செலுத்தி அவற்றை இன்சுலின் உற்பத்தி செய்ய வைக்கிறார்கள்.
இவ்வாறு உற்பத்தியாகும் இன்சுலினைப் பிரித்தெடுத்து,மனித இன்சுலினை ஒத்த நிலையை அடைய பல்வேறு நவீன முறைகளைப் பயன்படுத்தி இவை தயாரிக்கப்படுகின்றன.
எந்த இடத்தில் போடுவது
மேல்கையின்வெளிப்புறம்,மேல்தொடையின்,வெளிப்புறம்பிட்டங்கள், அல்லது கீழ்வயிறு
இந்த இடங்களில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு இடங்களில் குத்திக் கொள்ளலாம்.
Thanks to Kumudam.

புதுடில்லி : தொழில், வர்த்தகம் போன்றவற்றில் மட்டுமல்ல, 'ஷுகர்' வியாதியிலும் இந்தியாவை சீனா மிஞ்சி விட்டது. சமீபத்தில், சீனாவில் 46 ஆயிரம் பேரிடம் நீரிழிவு நோய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு 10 சீனர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது; 1.5 சதவீதம் பேர் அந்த நோயால் பாதிக்கப்படக் கூடிய விளிம்பு நிலையில் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. சீனாவின் முக்கியமான 14 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நகர்ப்புறங்களில் 14 பேர்களில் ஒருவர் என்ற வீதத்திலும், கிராமப்புறங்களில் எட்டுப் பேருக்கு ஒருவர் என்ற வீதத்திலும் அந்நோய் பாதித்துள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த ஆய்வில் வளரிளம் பருவத்தினரில் மட்டும் ஒன்பது கோடியே 20 லட்சம் பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில், 15 கோடி வளரிளம் பருவத்தினர் அந்நோயால் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் ஐந்து கோடி ஆண்களும், நான்கு கோடி பெண்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளாவிய நிலையில் பல நாடுகளில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இன்னும் முழுமையாகக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்தியாவில் இப்போது ஐந்து கோடியாக இருக்கும் ஆண்களின் தொகை 2030க்குள் எட்டு கோடியைத் தொட்டு விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 25/3/10
Thanks to BBC Tamil

Wednesday 17 November, 2010

KIWA-தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்.
கண்ணியத்திற்குரிய கடையநல்லூர் வாசிகள் அனைவருக்கும்.
அன்புத்தமிழ் நெஞ்சங்கள், உலகமுஸ்லிம்கள், மற்றும் பாசமிகு பாரதமக்கள் அனைவருக்கும். KIWA வின்  தியாக திருநாள் நல் வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்கள் மீதும்  நல்லருள் புரிவனாக. ஆமீன்

அரஃபா நாளில் நோன்பு நோற்பது

ரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபாதின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும்.

அதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.

"நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்"
அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.
அரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும்தான் நோற்க வேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருக்கும் ஹாஜிகள்) நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி.
அரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஓர் உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காகச் சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணாரக் கண்டு உணர்ந்திருப்பார்கள். இலட்சக்கணக்கான மக்கள் ஓர் இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னைப் படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்புத் தேடுவதும் பல மணிநேரம் இவ்வுலகச் சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது.
அதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து, தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்குக் கூடுதலாக முஸ்லிம்களில் சிலர் துல்ஹஜ்ஜின் ஆரம்ப பத்து நாட்கள் நோன்பு நோற்கிறார்கள். அரஃபா தினம் அடங்கிய துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளதுதான் இதற்குக் காரணமாகும்.
"அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?" என்று வினவ, "ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட; என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லை எனில் அது மிகவும் சிறந்த செயலே" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பத்து நாட்களின் சிறப்பைக் கருதி முஸ்லிம்களில் சிலர் இப்பத்து நாட்களிலும் நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் இந்நாட்களில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதைக் கண்டதில்லை என்று மறுத்துரைக்கின்றார்கள்.
"நான் நபி (ஸல்) அவர்களை (இந்தப்)பத்து நாட்களில் நோன்பு நோற்றதாகப் பார்த்ததே இல்லை" அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.
மற்றவரைவிட எல்லாவிதத்திலும் முன்னிலையில் இறை தியானங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்பி, தன்னை எல்லாவிதமான இறைதியானங்களிலும் ஈடுபடுத்தி முன்னுதாரணமாக விளங்கிய நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதைப்பற்றியும் அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அவ்வாறு அறிவித்தாக நாமறிந்தவரை செய்திகளைக் காண முடியவில்லை. எனவே இந்த அரஃபா நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். மற்ற நாட்களைவிட இந்த நாட்களில் அல்லாஹ்வைத் துதிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முயல வேண்டும்.

நோன்பு நோற்பது இறைவனிடம் மிகப்பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் செயலாக இருந்தாலும் ரமலான்மாதக் கடமையான நோன்பைத் தவிர துல்ஹஜ் மாதத்தில் தொடர்ச்சியாக நோன்பு வைக்க முஸ்லிம்களின் வழிகாட்டியான நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்தச் செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது. ஆனால் அதேநேரம் குர்ஆன் ஓதுதல், திக்ருகள், தேவையுடையவருக்கு உதவுதல், இரவுத் தொழுகை, அல்லாஹ்வைப் புகழ்தல், இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்பு தேடுதல்), ஸதகாத் (தர்மங்கள் செய்வது) போன்ற ஏனைய இறை அருளை பெற்றுத்தரும் காரியங்களில் ஈடுபடலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரின் நல் அமல்களையும் பிரார்த்தனைகளையும் ஏற்று நல்லருள் புரிவானாக... ஆமீன்.


-: மீள்பதிவு :-

பெருநாள் கொண்டாட்டம்

பெருநாள் கொண்டாட்டம்
புனித மிகு தியாகத் திருநாளை முன்னிட்டு, சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக, 17 மற்றும் 18 தேதிகளில் நமது கடையநல்லூர் கலந்தார் மஸ்தான் தெருவில் சிறுவர், சிறுமிகளுக்காக விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. சிறியவர்  முதல்பெரியவர்கள் வரை அனைவர்களும் கலந்து கொண்டு மகிழும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Friday 12 November, 2010

2010 +2 தேர்வில் 80% மதிப்பெண்- மாணவர்களுக்கு

2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு (BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree) படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்). 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது. இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம் 4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php சென்று தங்களுடைய +2 தேர்வு பதிவு எண்ணை (Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12-ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும் . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. +2 மதிப்பெண் சான்றிதழ்
பூர்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI. வளாகம், கல்லூரி சாலை
சென்னை - 600006
மேலும் விபரம் இந்த இணையதளத்தில் http://www.tn.gov.in/dge உள்ளது.
இந்த கல்வி உதவி தொகை பற்றிய முழு விபரம் தமிழில் அட்டச்மென்ட்டில் உள்ளது. விண்ணப்ப படிவமும் உள்ளது

தகவல்

S.சித்தீக்.M.Tech

Wednesday 3 November, 2010

இரத்த தானம் செய்வோம்

இரத்த தானம் செய்வோம்


”மூன்றில் (நோய்க்கான) நிவாரணம் உண்டு. 1) தேன் அருந்துவது 2)
இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது 3) தீயால்
சூடிட்டுக்கொள்வது. (எனினும்) தீயால் சூடிட்டுக்கொள்ள வேண்டாம் என என் சமுதாயத்துக்கு நான் தடைவிதிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)
புகாரியின் மற்றோர் அறிவிப்பில், தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும்
நிவாரணம் உள்ளது என்று வந்துள்ளது. நபிகளார் காலத்தில், உடலிலிருந்து
அதிகபட்ச இரத்தத்தை அதற்குரிய கருவியால் உறிஞ்சி வெளியேற்றிவிடுவது வழக்கம். அதற்காகவே தனிப்பட்ட முறையில் சிலர் இருந்துவந்தனர். அவ்வாறு இரத்தத்தை வெளியேற்றுவதில் நிவாரணமும் உடலுக்கு ஆரோக்கியமும் உள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆகவே, நம் உடலிலுள்ள உதிரத்தைக் குறிப்பிட்ட சில மாதங்களுக்குப்பின்
வெளியேற்றி இரத்ததானம் செய்வதால் நம் உடலுக்கு முற்றிலும் ஆரோக்கியமே என்பதை மேற்கண்ட நபிமொழி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் நபிகளார் காலத்தில், உறிஞ்சி வெளியேற்றப்பட்ட உதிரத்தை மண்ணில் புதைத்து
விடுவார்கள். ஆனால், விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள இன்றை
காலத்தில், அந்த உதிரம் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது.

உதிரத்தை உறிஞ்சி வெளியேற்றுவதில் உடலுக்கு ஆரோக்கியம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள அதே கருத்தை இன்றைய மருத்துவர்களும் கூறுகின்றனர்.
இரத்ததானம் (குறுதிக்கொடை) என்பது ஒருவர் தம் இரத்தத்தைப் பிறருக்குப்பயன்படும் வகையில் தயாள குணத்துடன் தானமாக வழங்கப்படுவதாகும். பொதுவாக, ஆரோக்கியமான ஒரு மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்ததானம் செய்வோரிடமிருந்து ஒரு நேரத்தில் 300 முதல் 350 மி.லி இரத்தமே
எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட இரத்தம் இரண்டு வாரங்களுக்குள் நாம் உண்ணும் சாதாரண உணவின் மூலமே மீண்டும் உற்பத்தியாகிவிடும். ஆக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நாம் இரத்ததானம் செய்யலாம். இதனால் நம் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதுமட்டுமல்ல, நம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாகி, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறையில் மனிதனுக்கு எவ்வாறெல்லாம் நன்மை உள்ளது என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Monday 1 November, 2010

காமராஜ் பல்கலை கல்லூரிகளில் இலவச பயிற்சிகள்

காமராஜ் பல்கலை கல்லூரிகளில் இலவச பயிற்சிகள்


மதுரை : ""மதுரை காமராஜ் பல்கலைகழக கல்லூரிகளில் இலவச பயிற்சி அளிக்கும் வகையில், 11 சமுதாயக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது,'' என, பல்கலை சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில், கட்டணமில்லாமல் ஆறுமாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி மற்றும் மேலூர் அரசுக் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங் பயிற்சி, பசுமலை சவுராஷ்டிரா கல்லூரி மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரிகளில் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றன. மதுரை பாத்திமா கல்லூரி மற்றும் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரிகளில் மொபைல்போன் பழுதுநீக்கும் பயிற்சி; பசுமலை மன்னர் கல்லூரி மற்றும் விருதுநகர் வன்னியப்பெருமாள் நாடார் கல்லூரிகளில் ஆட்டோமொபைல் மெக்கானிஸம் பயிற்சி; தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் பிரிட்ஜ், "ஏசி' பழுதுநீக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. மதுரை காமராஜ் பல்கலை கல்லூரியில் பிளம்பிங், வயரிங் பயிற்சி, ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் டெய்லரிங் பயிற்சி அளிக்கப்படுகின்றன. பயிற்சி குறித்து அந்தந்த கல்லூரி முதல்வர்களை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமியை, 0452 - 253 7838ல் தொடர்பு கொள்ளலாம்

(நன்றி S.Mohideen)

“Worries are dark room where negatives are developed “
Please consider the environment before printing this e-mail

பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர்களுக்கு சலுகைககள்

பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சலுகைககள்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல்.,நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல்.,பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல்.,நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “என் நண்பன் சூப்பர்’ என்ற பெயரில் கடந்த 7ம் தேதி முதல் சிம்கார்டு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பிளானில் இருந்து, ஒரு பி.எஸ்.என்.எல்.,லேண்ட் லைன் நம்பருக்கு முற்றிலும் இலவசமாக பேசலாம். மேலும் 30 பைசா கட்டணத்தில் 2 பி.எஸ்.என்.எல்.,நம்பரில் பேசலாம். ஒவ்வொரு மாதமும் 200 எஸ்.எம்.எஸ்.,இலவசமாக வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல்.,நெட்வொர்க்கிற்கு இரவு 11 மணி முதல் காலை 7 மணிவரை பேச ஒரு நிமிடத்திற்கு 20 பைசா மட்டுமே.பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர்களுக்கு 20 ரூபாய் மதிப்புள்ள சிம்கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் 46 ரூபாய் மதிப்புள்ள எப்.ஆர்.சி.,டாப் அப்மூலம் 180 நாட்கள் வேலிடிட்டியுடன் 10 ரூபாய் டாக்டைமும் பெற முடியும். இத்திட்டத்தில் தொடர்ந்து நீடிக்க ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 50 ரூபாய்க்கு டாப் அப் செய்ய வேண்டும்.பி.எஸ்.என்.எல்.,3ஜி டேட்டா கார்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக 275 ரூபாய், 440 ரூபாய், 716 ரூபாய்க்கான டேட்டா ரீசார்ஜ் விலை குறைக்கப்பட்டு 222 ரூபாய், 352 ரூபாய், 572 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மேலும் 2 ஆயிரத்து 756 ரூபாய்க்கு 3ஜி டேட்டா அன் லிமிடெட் விலை அதிரடி சலுகையாக ஆயிரத்து 499 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. 3ஜி டேட்டா கார்டு உடனடியாக பெற்றுக்கொள்ள நெல்லை பி.எஸ்.என்.எல்.,பொதுமேலாளர் அலுவலகத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம்.பொதுமக்கள் 3ஜி டேட்டா கார்டின் குறுகிய கால பயன்பாட்டிற்கு புதிய அறிமுக பேக் 10,25,50 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்.,3ஜி போஸ்ட்பெமிட் 519 ரூபாய்க்கும், 999 ரூபாய்க்கும், ஆயிரத்து 359 ரூபாய்க்கும் திட்டத்தின் மூலம் 19 மாதம் 10 மாதம், 7 மாதம் என 9 ஆயிரத்து 861 ரூபாயும், 9 ஆயிரத்து 920 ரூபாயும், 9 ஆயிரத்து 513 ரூபாயும் முன்பணம் மொத்தமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 3ஜி டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது.அனைத்து 2ஜி வாடிக்கையாளர்களுக்கும், வீடியோ கால் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 2ஜி சிம்கார்டை 3ஜி வசதியுள்ள மொபைலில் போட்டு யு.எம்.டி.எஸ்.,அல்லது ஆட்டோமேட்டிக் தேர்வு செய்தால் 3ஜி கவரேஜ் உள்ள இடங்களில் இந்த வசதி கிடைக்கும்.இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday 26 October, 2010

தமிழனின் மனசாட்சி

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'
"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'
"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா?
                                                                                                    
                                           மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி.

Tuesday 19 October, 2010

உயர்ந்த கல்வி நிறுவங்களில் இலவசமாக M.E/M.Tech படிக்க

இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவங்களில் இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு

GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech படிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய http://www.gate.iitb.ac.in/gate2011/

இந்தியாவில் 8 இடங்களில் உள்ள IIT, 20 இடங்களில் உள்ள NIT, டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை.

பெற்றோர்களே!
நுழைவு தேர்வு இல்லாமல் நேரடியாக படிக்க சில லட்சம் ரூபாய் செலவாகும், ஆனால் இந்த தேர்வு மூலம் பணம் வாங்கி கொண்டு படிக்க முடியும். எனவே கல்வி கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவங்களுக்கு நாம் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுக்காமல் நீங்கள் மேற்படிப்பு படிக்க இது போன்ற தேர்வை எழுத சொல்லுங்கள். மாணவர்களும் மேற்படிப்பு என்றாலே லட்சங்களை பெற்றோர்காளிடம் இருந்து பெறவேண்டும் எண்ணத்தை மாற்றி இது போன்ற நுழைவு தேர்வை எழுதி குடும்பத்தின் சுமையை குறைத்து நீங்களும் நல்ல கல்வியை பெற்று அதிக சம்பளத்தில் வேலையில் சேருங்கள் இன்ஷா அல்லாஹ்

பெரும்பாலும் நாம் படிப்பது நமது கல்வி தரத்தை உயர்த்திகொள்வதற்க்கும், நல்ல வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுவதற்க்கும், வெளி நாடுகளில் சென்று படித்து சிறந்த கல்வியை பெற்று நல்ல சம்பளத்துடன் நல்லவேலையில் சேர்வதற்க்கும்தான். கல்வி துறையில் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற நுழைவு தேர்வு தேர்வுகளை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். ஏதோ எல்லாரும் படிக்கின்றனர் நானும் படிக்கின்றேன் என்று இருந்துவிடக்கூடாது, பணத்தை வைத்து கல்லூரியில் இடம்தான் வாங்கமுடியும், படிப்பை வாங்கமுடியாது, வேலையையும் வாங்க முடியாது, நன்றாக படித்தால் தான் நல்ல வேலைகிடைக்கும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 27,
ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். http://onlinegate.iitm.ac.in/iitweb

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : சென்னையில் உள்ள IIT மற்றும் குறிபிட்ட State Bank of India கிளைகள் (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.)
விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000 (ஆன்லைனில் ரூ.8,00)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Chairman, GATE Office, Indian Institute of Technology Madras, Chennai 600 036,

மேலதிக விளக்கம் பெற தொடர்புகொள்ள வேடிய தொலைபேசி எண் : 044-2257 8200 (சென்னை IIT)
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.

2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்

3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்

தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 13,

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15
 

Monday 11 October, 2010

கடையநல்லூர் பேட்டை மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் பயான்...(கிவா)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாப்புகழும் சகல வல்லமை பொருந்திய அல்லாஹ்வுக்கே!!!!
10 -10 -10 ஞாயிறு அன்று மாலை 4 மணியளவில் கடையநல்லூர் பேட்டை மேல்நிலைப் பள்ளியில் கிவா (கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்பர் அசோசியேசன்) நடத்திய மாபெரும் மகளீர் மார்க்க விழிப்புணர்வு பயான் அல்லாஹுவின் பேரருளால் விமர்சையாகவும் மிக சிறப்பாகவும் நடந்து முடிந்தது. கூட்டத்திற்கு ஆர்வமுடன்
நானூருக்கும் மேற்ப்பட்ட பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆசிரியைகள் சகோதரி பாத்திமா மற்றும் பாத்திமா கனி கலந்து கொண்டு இஸ்லாம் கூறும் பெண்கள் ஒழுக்கம், குழந்தை வளர்ப்பு முறை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்திற்கு ஆதரவு தந்த பேட்டை, மதினநகர் ஜமாத்தார்கள், ஒத்துழைப்பு கொடுத்த சகோதரர்கள் மற்றும் கிவா உருப்பினர்கள் அனைவர்களுக்கும் கிவா நிர்வாகிகள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

  

Friday 8 October, 2010

கிவா நடத்தும் மாபெரும் பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்)
கடையநல்லூர் இஸ்லாமிய சகோதரர்களே, நண்பர்களே
உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு
முதன் முறையாக  கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்பார் அசோசியேசன் (கிவா)நடத்தும் மாபெரும்  மகளீர் பயான்.

மார்க்க விழிப்புணர்வை பெண்கள்களுக்கு ஏற்ப்படுத்த கல்லூரி பேராசிரியைகள் (ஆலிமா) கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

வரும் 10 ஆம் தேதி ஞாயிறு   மாலை 4 :00 முதல் 6 :௦௦ வரை.
இடம் கடையநல்லூர் பேட்டை முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள,  உங்கள் வீட்டுப் பெண்களுக்கு அனுமதி கொடுத்து, கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன்பெற  செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

KIWA - UAE

பாப்ரி மஸ்ஜித் நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும்.

கட்டுரையாளர்:பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பர்


அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும். ஆட்சியாளர்களால் பல வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு தீர்மானம் மட்டுமே அந்த தீர்ப்பில் தெளிவாக காணக்கிடைக்கிறது.
நிலத்தின் உரிமை யாருக்கு? என்பதுதான் வழக்கிய முக்கிய பிரச்சனை. தகர்க்கப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் ஒரு புதிய கோயிலை கட்டுங்கள் என்பதுதான் அத்தீர்ப்பின் முக்கிய பலன்.
சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் சமகால அரசியலிலும், மதரீதியான பிளவுகளிலும் மூழ்கிக் கிடக்கிறது. வரலாற்று ரீதியான ஆவணங்களின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் தீர்ப்புக்கூற வேண்டும் என உரிமைக் கோரப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் பரிசீலித்திருந்தும்கூட தீர்ப்பு கூறும் வேளையில் அதனை முற்றிலும் புறக்கணித்து விட்டதாகவே காணமுடிகிறது.
ஒரு நீதிபதி கூறியுள்ளது என்னவெனில், தெய்வீக அம்சம் பொருந்திய நபர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் துல்லியமான ஒரு இடத்தில் பிறந்தார் என்பதாகும். அதனால்தான், கோயிலை அவ்விடத்தில்தான் கட்டவேண்டும் என கூறுகிறார்.
நாட்டு மக்களின் நம்பிக்கையையும், எண்ணங்களையும்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால்,இதனை நிரூபிக்க தேவையான எத்தகையதொரு ஆதாரமும் இல்லை. ஆகையால்தான், இந்த நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்த்தது இத்தகையதொரு தீர்ப்பை அல்ல.
ஹிந்துக்கள் ராமனை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அதன் பெயரால் மட்டும் ராமனின் பிறந்த இடம் தொடர்பான, நிலத்தின் உரிமைத் தொடர்பான தீர்மானங்களை ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்றுக்கொள்வது சரியா?
அதுமட்டுமல்ல, இவ்விடத்தை கைப்பற்றுவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது என்பதும் நினைவுக் கூறத்தக்கது.
நீதிமன்றம் கூறுகிறது, 12-ஆம் நூற்றாண்டில் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததாம். அது தகர்க்கப்பட்ட பிறகே அங்கு மஸ்ஜித் கட்டப்பட்டதாக தீர்ப்பில் கூறப்படுகிறது. அதனாலேயே, அங்கு ஒரு கோயிலை கட்டுவதற்கான நியாயமும் தீர்ப்பில் முன்வைக்கப்படுகிறது.
இதுத்தொடர்பாக அகழ்வாராய்ச்சித்துறை (ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா) நடத்திய ஆய்வுகளும் அவர்களுடைய அனுமானங்களும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அகழ்வாராய்ச்சித் துறையின் அனுமானங்களை, ஏராளமான பிரபல அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கடுமையான கேள்வி எழுப்பியதும், நிராகரித்ததுமாகும்.
இவ்விஷயங்கள் அந்தந்த துறைகளின் வல்லுநர்களின் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாகும். அதில், பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் தற்பொழுதும் உள்ளன. ஆனால், நீதிமன்றமோ ஒரு தலைப்பட்சமான இந்த நிலைப்பாட்டை, பெரிய அளவிலான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இத்தீர்ப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதவியலாது.
இன்னொரு நீதிபதி கூறுகிறார், தான் ஒரு வரலாற்று அறிஞர் இல்லை என்பதால் இவ்வழக்கின் வரலாற்று ரீதியான விவகாரங்களில் தலையிட முடியாது என. ஆனாலும், அவர் கண்டறிந்தது, இந்த வழக்குகளை தீர்மானிப்பதில் வரலாறோ, அகழ்வாராய்ச்சி அறிவியலோ முற்றிலும் தேவையல்ல என்பதாகும். ஆனால்,இங்கு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவெனில் நிலம் தொடர்பான உரிமைக்கோரல்களில் வரலாற்றுரீதியான சாத்தியம் என்ன என்பதாகும்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைப் பெற்றிருந்த வரலாற்றுரீதியான சிதிலங்கள்தான் இங்கு ஆய்வுக்குரிய விஷயம். அங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மஸ்ஜித் ஒன்று நிலைப்பெற்றிருந்தது. அது, இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளின் காரணமாக ஒரு கும்பல் வேண்டுமென்றே அதனை இடித்துத் தள்ளியது.
ஆனால், இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இதுவரைக் கிடைத்த பக்கங்களில் எந்த ஒரு இடத்திலும் இந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவம் நம்முடைய பாரம்பரியத்திற்கு எதிரானது என்றோ அல்லது கண்டிக்கத்தக்க சம்பவம் என்றோ கூறப்படவில்லை. இனி வரவிருக்கும் ராமர்கோயில் என்பது ராமன் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ஒரு இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது கட்டப்பட்டது எனக் கூறப்படும்.
பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் எப்பொழுதோ நடந்ததாக கூறப்படும் கோயில் இடிப்பு நீதிமன்றத் தீர்ப்பில் கண்டிக்கப்படுகிறது. அதுவே, புதிய கோயில் கட்டுவதற்கான நியாயமாகவும் தீர்ப்பில் கூறப்படுகிறது. அங்கே நிலைப்பெற்றிருந்த மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் இந்தளவிற்கு தீர்ப்பில் கண்டிக்கப்படவில்லை. மிகவும் வசதியாக, இவ்வழக்கின் எல்லைக்கு வெளியேதான் மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் என நீதிமன்றம் தீர்மானித்திருக்கும் என தோன்றுகிறது.
நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை நமக்கு தருகிறது. அதாவது, ஏதேனும் ஒரு புனிதர் பிறந்தார் எனக்கூறி ஏதேனும் ஒரு மதப்பிரிவினர் ஏதேனும் ஒரு நிலத்தின் மீது உரிமைக்கோரலாம் என்பதாகும். இனி இத்தகையதொரு ஏராளமான ஜென்மபூமிகள் நாட்டின் பல பகுதிகளிலும் எழும்பும். தமது வசதிக்கேற்ப பொருந்திய ஒரு இடத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சில உரிமை வாதங்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் உருவாக்கினாலே போதும்.
இங்கே நடந்த வரலாற்றுச் சின்னத்தின் இடிப்பை நீதிமன்றம் கண்டிக்காத சூழலில் எதிர்காலத்தில் வழிபாட்டுத்தலங்களை இடிக்க பலரும் கிளம்பினால் அதனை எவ்வாறு தடுக்க இயலும்?
வழிப்பாட்டுத்தலங்களின் நிலையை மாற்றுவதை தடைச்செய்யும் 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெரிதாக ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதுவரையிலான நமது அனுபவம் எடுத்தியம்புகிறது.
வரலாற்றில் நிகழ்ந்ததெல்லாம் நிகழ்ந்ததுதான். அவற்றையொன்றும் இனி மாற்றவியலாது. ஆனால், உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆவணங்கள் பரிசோதிக்கவும், அதன் நம்பிக்கைக்குரிய ஆதாரங்களை கண்டறியவும் நம்மால் இயலும்.
இன்றைய சமகால அரசியல் விருப்பங்களுக்காக வரலாற்றை மாற்றவியலாது. வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்து, அதற்கு பதிலாக மதநம்பிக்கையை நிலைநிறுத்துகிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு.
ஆனால், சமூகத்தில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைப்பெற வேண்டுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கு முக்கியமாக தேவை என்னவெனில், நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவதற்கு மதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த உணர்வு மக்களிடையே ஏற்படவேண்டும்.

 நன்றி:தி ஹிந்து, தேஜஸ் மலையாள நாளிதழ்

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திலேயே

புதுடெல்லி,அக்.8:அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திலேயே மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று டெல்லி ஜூம்மா மஸ்ஜித் தலைமை இமாம் மெளலானா சையத் அகமது புகாரி திட்டவட்டமாக அறிவித்தார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மத அறிஞர்கள் டெல்லியில் வியாழக்கிழமை கூடி அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தார்கள்.

அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மசூதி கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்குத் தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
"அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர்பாக தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.
மஸ்ஜித்திற்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபர் மஸ்ஜித் பிரச்னை தொடங்கியது முதல் அலாகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத்துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவைதான்.
முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக்கொண்டு, வகுப்புவாத சக்திகளுக்குத்தான் காங்கிரஸ் துணைபோய்க்கொண்டிருக்கிறது. இன்றைய கூட்டத்தில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. முஸ்லிம்கள் தனிச்சட்ட வாரிய உறுப்பினர்கள் சிலர் தாங்களாகவே சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு புறக்கடை வழியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரியான சமரசத் தீர்வை அவர்கள் காணப் போகிறார்கள்? இடிக்கப்பட்ட இடத்திலேயே மஸ்ஜிதை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம்.
இன்றைக்கு டெல்லியில் கூடிய நாங்கள் எங்களுடைய அமைப்பு வாயிலாக, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்" என்றார் சையத் அகமது புகாரி.

Sunday 3 October, 2010

வீணாகிப்போன விசாரணைகள், கிடப்பில் போடப்பட்ட ஆதாரங்கள் – அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு !

"பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை" என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

"இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்." இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
"சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்." இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார்? தோற்றவர் யார்? என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.
"இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது." என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.
ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமர்சனம். "இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்" என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், "சுக்குமி-ளகுதி-ப்பிலி" என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, "இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை" என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். "அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை" என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். "நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது" என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் ன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.
"கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை." என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.
இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. "எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி" என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத் தொடங்கியிருக்கிறது.
ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.
நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.
அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?
எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, "சர்ச்சைக்குரிய இடம்" என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.
அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம். போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல (TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.

பின்குறிப்பு – 1:
அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்?
மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?

பின்குறிப்பு – 2:
பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?

Saturday 11 September, 2010

துபாயில் KIWA வின் ஈத் பெருநாளின் பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்....

10-9-2010, துபாயில் KIWA வின் ஈத் பெருநாளின் பொதுக்கூட்டம் தேர துபாய் கோட்டைப் பள்ளியில் நடைபெற்றது. அஸ்ரத் முஜீப் ரஹ்மான் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் சமூகப்பணி, மற்றும் ராசப்பா அவர்கள் கல்வி ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் கிவாவின் ஆண்டு அறிக்கை வரவு செலவு கணக்குகளை அமைப்பின் பொருளாளர் மக்கட்டி ரபி தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டின் செயல் திட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற்று, உயர் கல்வி படிக்க வசதி இல்லாதவர்களுக்கு, இந்த கிவா அமைப்பு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என செயலாளர் ராசப்பா தெரிவித்தார். இதை அமைப்பின் ஆலோசனை குழு உறுப்பினர்களான ஜனாப் மக்தூம் மற்றும் நைனமுஹமத் அவர்கள் பொறுப்பெடுத்து கொண்டார்கள்.(அல்லாஹு அக்கபர் ).
2010 -2011கிவா அமைப்பு எதிர்நோக்கும் திட்டங்கள் :
1. இன்ஷா அல்லாஹ் வரும் கல்வியாண்டிலும் நமதூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்படும்.
2. வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பைக் கூட தொடர முடியாத மாணவ, மாணவியர்களை இனம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கப்படும்.
3. மார்க்க கல்வி பயில விரும்பும் பெண்களுக்கு இவ்வமைப்பு முழு ஆதரவும். தேவையான உதவிகளையும் வழங்கும்.
4. இன்ஷா அல்லாஹ் வரும் ஆண்டில் உயர்கல்வி பெறுவதற்காக கிவா அமைப்பை நாடி வரும் மனுக்களுக்கு குறைந்தது மூன்று பேருக்காவது உதவி செய்ய ஏற்ப்பாடு செய்யப்படும்.
5. மருத்துவ உதவியை நாடி வரும் ஏழைகளுக்கு அவர்களுடைய தேவையறிந்து உதவி செய்து தரப்படும்.
6. நமது சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எளியவர்களுக்கு சிறு தொழில் செய்ய முன்வருவோருக்கு ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு (தையல் மெசின், கிரைண்டர், தள்ளுவண்டி போன்றவைகளுக்காக) இந்த கிவா அமைப்பு பொருள் உதவி வழங்கப்படும்.
7. வட்டி இல்லா கடன் உதவிக்கு இந்த அமைப்பு முயற்சி மேற்கொள்ளப்படும்.
8. மக்கள் மத்தியில் மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதர்க்காக பொதுக்கூட்டங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிட ஏற்ப்பாடு செய்யப்படும்.
இது போன்ற திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். புதிய தலைவராக அசன் கான், துணைத் தலைவராக அப்துல் கரீம் அவர்களையும், தேரா, சோன்பூர்க்கான கிளைச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளர்கள்.
இக்கூட்டத்திற்கு கடையநல்லூர்வாசிகள் பலர் கலந்து கொண்டனர். ரஹ்மான் கான் தலைமைதாங்கினார், வரவேற்புரை திவன்மக்தூம், தலைவர் அசன் கான் நன்றியுரை நிகழ்த்தினார்கள். மேலும் நம் ஊர்வசிகள் உறுப்பினர்களாக தங்களைச் சேர்த்துக்கொண்டு இவ்வமைப்பிற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
அல்லாஹுவின் பேரருளால் இக்கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.
மரணத்தின் பின்பும் உனது நல்லமல் தொடர்ந்திருக்க வேண்டுமா?
மனிதன் மரணித்ததும் எல்லா நற்கருமங்களும் நின்றுவிடும் மூன்று காரியங்களைத் தவிர எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் (ஸதகத்துல் ஜாரியா எனும்) நன்மை தொடர்ந்திருக்கும் தர்மம், பிரயோஜனமளிக்கும் கல்வி, மரணித்தவருக்காக பிரார்த்திக்கும் பிள்ளை ஆகியவற்றை குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).
எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான். - நபி மொழி
உங்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் 4:32)
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான். (அல்-குர்ஆன் 66:8)

Monday 23 August, 2010

படிக்க உதவி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.....


மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி);  ஆதாரம் : முஸ்லிம்)

25-6-2010 அன்று கிவா வின் நிர்வாக கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானகள் விவாதிக்கப்பட்டன.
அத்துடன் ஊரிலிருந்து கல்வி உதவிக்காக மனுக்கள் வந்திருந்தன.
பேட்டை ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த A . இப்ராகிம், என்பவர்
+2 முடித்துவிட்டு, பாலிடெக்னிக் படிக்க உதவி கேட்டுள்ளார்.
இவரது குடும்பம் போதிய வருமான வசதி இல்லாததால் கிவா விற்கு கடிதம்(மனு) அனுப்பியுள்ளார்.
இந்த மனு விசாரிக்கப்பட்டு, அன்று நடந்த கூட்டத்தில் மனுதாரரின் மேல்படிப்பிற்கு ரூபாய் பத்தாயிரம் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
இந்த பணத்தை, பேட்டை பள்ளியில், வெள்ளிக்கிழமை ஜும்மாவில் (2-07-2010) அறிவிக்கப்பட்டு, சிபாரிசு செய்த ஜமாஆத் தலைவரின் முன்னிலையில் மனுதாரருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொடுக்கவேண்டிய பணத்தை, அன்று கூட்டத்தில் கலந்து கொண்ட கிவா நிர்வாகிகளிடத்தில் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(கிவா கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்:
1 மக்கட்டி ரபி அகமது, 2. ராசப்பா (நாகூர் மீரான்) , 3. மகபூப் கான், 4. கரீம்,
5. மைதீன் K S, 6 வர்ணமல்லி ஹபீப், 7. அப்துல் ஜலால், 8. ஷாஜகான்.
9 முஹம்மது சித்தீக்.)


மேலும் இதுபோன்ற உதவிப்பணிகள் மேலும் வலுப்பெற உங்களுடைய துஆ உடன் தேவையான உதவிகளையும் தந்து இந்த கிவ அமைப்பின் வளர்ச்சிக்கும், நமது ஊரில் இல்லாதவர்களுக்கு (ஏழைகளுக்கு) உதவுவதன் மூலம் மறுமையில் நிரந்தர நல்ல அமல்களை பெற உங்கள் எல்லோரையும் அன்புடன் அழைக்கிறோம்.
வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் நல்லவர்களுடைய கூட்டத்தில் ஆக்கி அருள்வானாகவும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

Tuesday 20 July, 2010

அன்னிய மண்ணில்- நான்

அன்னிய மண்ணில்- நான்

இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்…
அன்னை மண்ணில்
வேரறுபட்டதும்,
அன்னிய மண்ணில்- நான்
வேர்ப்பட்டதும்,
விமானம் ஏற‌
தீர்மானம் செய்ததால்…
அன்று அரும்பாக இருக்கையிலே
ஆகாய பார்வையிலே
அலைபாய்ந்த ஆசையிலே
அழகாக தோன்றிய‌
ஆகாய ஊர்தியும்,
அரங்கேறி போகையிலே
ஆனந்த்தம் இல்லாத‌
அனுபவம் ஆனது.
அதில் அலங்காரம் செய்துதான்
ஆகாரம் வந்தது,
ஆசைபட்டு தீர்த்திடாமல்
அசை போட்டு தீர்த்துவிட்டேன்…
இறங்கும் நேரம் வந்து விட‍- அன்று
இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு
இயற்கை என்று ஒன்றும் இல்லை…
மணல் நகரின் அனல் காட்சி
இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி…
அன்று நிவார‌ண‌ம் தேடி வந்த‌ ந‌க‌ர‌ம்
இன்று நிரந்த‌ர‌ம் ஆகிப்போன‌ ந‌க‌ர‌ம்,
நாள் ‍ விடிந்தாலும் முடிந்தாலும்
ஒரே போல‌ இருக்கும்,
அட‌ அறைக்குள்ளே சிறைவைத்தால்
வேறென்ன‌ இருக்கும்…
உற‌வோடு உற‌வாட‌
தொலைபேசி என‌க்கு,
அதில் போன‌ காசுக்கு
இங்கேது க‌ண‌க்கு…
இங்கே ம‌னைவியோடு உற‌வாடி
பிள்ளை பெற‌முடியாம‌ல்,
பில்லை பெற்ற‌வ‌ர் ஆயிர‌ம்…
இள‌மையும் வேலைக்கு
இரையாகி போச்சு,
கால‌மும் காசுக்கு
க‌ரியாகி போச்சு,
த‌லையெல்லாம் அத‌ற்குள்ளே
ந‌ரையாகி போச்சு,
காசாவ‌து மீந்த‌தா
செல‌வாகி போச்சு…
வ‌ருமான‌ம் வ‌ருமுன்னே
செல‌வு வ‌ந்து சேர்ந்திடும்,
வெறுமாக‌ ஊர் சென்றால்
உற‌வு வ‌ந்து சேருமா?
காசுக் க‌ண‌க்குக‌ள்
க‌வ‌லை த‌ருகிற‌து,
க‌ட‌ந்த‌ கால‌ம்தான்
க‌ண்ணில் வ‌ருகிற‌து…
இனி இஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
ந‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌து திரும்பாது…
எந்நாடு சென்றாலும்
என் நாடு ஆகாது,
சொர்க‌மே த‌ந்தாலும் ‍ ம‌ன‌தில்
தாய் நாடு சாகாது…
kadayanallur.org

Monday 21 June, 2010

KIWA பரிசு அளிப்பு விழா நடைபெற்றது IN KDNL

KIWA வின் முதலாம் ஆண்டு பரிசு அளிப்பு

விழா நடைபெற்றது

வெள்ளி 11-06-2010, மாலை 7 மணிக்கு, கடையநல்லூர் சமுக நல இயக்கமும் கிவா அமைப்பும் இணைந்து பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்வைத்து 10th மற்றும் +2 வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
இதில் முதல் பரிசுகளை உயர்திரு S. பரமசிவம் தென்காசி தாசில்தார் மற்றும் கடையநல்லூர் S I செவராஜ் அவர்களும், இரண்டாம் பரிசுகளை கிவா நிர்வாகிகள் மக்கட்டி ரபி மற்றும் காமினி காதர் அவர்களும், மூன்றாம் பரிசுகளை KCN மற்றும் சமுக நல இயக்க நிர்வாகிகளும் வழங்கினார்கள்.
மேலும் நமது ஊரில் +2 வில் முதலிடத்தை பெற்ற கே.உ ஜெஸிமா ரஸனா (1123 /1200) மசூதுதைக்கா மே.நி பள்ளி. மற்றும் பத்தாம் வகுப்பில் முதலிடத்தை பெற்ற S ராமசுப்ரமனியன் (485 /500) ஹிதாயதுல் இஸலாம் மே.நி பள்ளி. இவர்களுக்கு SUPER STUDENT AWARD வழங்கப்பட்டது. விழாவிற்கு ஊரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Sponsored By

Kadayanallur Islamic Welfare Association - UAE
Everest Politechnic College - Kdnl
Crecent Metric School. - Kdnl

KIWA வின் முதலாம் ஆண்டு பரிசு அளிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ....
கடையநல்லூர் நண்பர்களுக்கு......

KIWA வின் முதலாம் ஆண்டு பரிசு அளிப்பு
விழா

கடையநல்லூர் சமுக நல இயக்கத்துடன் இணைந்து.
பள்ளிகளில் 10th மற்றும் +2 வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கவும்
மேலும் நமது ஊரில் முதலிடத்தை (10th மற்றும் +2 வில்) பிடித்தவர்களுக்கு SUPER STUDENT AWARD வழங்கப்பட உள்ளது.
இடம் : பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி.
நாள் : 11-06-2010, நேரம் : மாலை 7 மணிக்கு.
ஊரில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

(ஊரில் உள்ள UAE நண்பர்கள் தவறாது கலந்து கொள்ள, கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

இப்படிக்கு
கிவா

Monday 19 April, 2010

பொதுக்குழு கூட்டம் 23-4-2010

கடையநல்லூர் முஸ்லிம் சமுதாய நண்பர்களுக்கு.


உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

வரும் வெள்ளிக்கிழமை 23-4-2010 அன்று மலை 6:30 மணியளவில் தேர, கோட்டைப்பள்ளியில் கிவா வின் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த (KIWA) அமைப்பின் வளர்ச்சிக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும்.
அமைப்பை வலுப்படுத்த அதன் நோக்கம், செயல் திட்டங்களை வடிவமைத்து விவாதிக்க வேண்டும்.
எனவே கடையநல்லூர் சகோதரர்களே தவறாது கலந்து கொள்ளுங்கள்.

கூட்டம் யாருக்கோ, எவருக்கோ என்று அலட்சியமாக இருந்துவிடாமல், சந்தா கொடுத்துவிட்டோம் என்று ஒதுங்கிகொள்ளாமல் உங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.
உங்களுடைய முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தந்து,
நமது ஊர்முஸ்லீம் சமுதாய ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நாம் ஒன்றுபட்டுபாடுபட அழைக்கிறோம்.
தெரியாத நண்பர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.
பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் நிர்வாகத்தில் பங்கெடுத்து உங்களுடைய ஒத்துழைப்புடன், எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் இந்த கிவா அமைப்பு வெற்றியடைய துஆ செய்யுமாறு வேண்டுகிறோம்.

நம் ஒன்றுபட வேண்டும்,
ஊர்விசயத்தில் அக்கறை கொள்ள வேண்டும்,
நமது குடும்பங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்,
ஏழை எளிய நமது சமுதயத்தவர்களுக்கு நாம் உதவிட வேண்டும்.
எனவே இம்மையின் சேவையில் மறுமையின் நன்மையை நாடி எல்லோரும் இந்த KIWA அமைப்பில் உறுப்பினர்களாக வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இப்படிக்கு

KIWA-UAE

e-mail: kiwa.uae@gmail.com

web : kiwauae.blogspot.com

Saturday 13 March, 2010

Kiwaவின் பொதுக்குழு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

துபாயில் வெள்ளியன்று (12-3-10) Kiwa (Kadayanallur Islamic welfare Association ) -வின் பொதுக்குழு கூட்டம் கோட்டைப் பள்ளியில் நடைபெற்றது. கடையநல்லூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. அதில், நமதூரில் பெண்களின் தற்போதைய நிலவரம், பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதை செயல்முறைப்படுத்துவது, மேலும் துபாயில் கிவா வில் உறுப்பினர்கள் பலர் இருந்தும் கூட்டத்திற்கு வருவதில் ஆர்வம் காட்டாதது, (சமுதாய அக்கறையின்மை) பற்றியும் பேசப்பட்டது.

தீர்மனகள்:
1 அங்காங்கே பெண்களுக்கு என மார்க்க விழிப்புணர்வை (பெண்கள் பயான்) ஏற்படுத்துவது.
2 வரும் கல்வி ஆண்டில் எழியவர் யாரேனும் கல்விக்காக கிவா வின் உதவியை நடினால் அவர்களின் தேவை அறிந்து உதவுவது.
3 கிவா வில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது. ( இதற்க்கு வேண்டி புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது )
போன்ற தீர்மானங்கள் நிறேவேற்றப்பட்டன.
மேலும் உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் நிர்வாகிகள் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய சகோதரர்கள் சிலர் கிவா வில் உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டார்கள்.
கூட்டத்திற்கு அதன் அமைப்பாளர் ரபி அஹமது தலைமை தாங்கினர். செயலாளர் மீரான் (ராசப்பா) கிவா-வின் விளக்க உரையும் அவரின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

வஸ்ஸலாம்