அன்னிய மண்ணில்- நான்
இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்…
அன்னை மண்ணில்
வேரறுபட்டதும்,
அன்னிய மண்ணில்- நான்
வேர்ப்பட்டதும்,
விமானம் ஏற
தீர்மானம் செய்ததால்…
அன்று அரும்பாக இருக்கையிலே
ஆகாய பார்வையிலே
அலைபாய்ந்த ஆசையிலே
அழகாக தோன்றிய
ஆகாய ஊர்தியும்,
அரங்கேறி போகையிலே
ஆனந்த்தம் இல்லாத
அனுபவம் ஆனது.
அதில் அலங்காரம் செய்துதான்
ஆகாரம் வந்தது,
ஆசைபட்டு தீர்த்திடாமல்
அசை போட்டு தீர்த்துவிட்டேன்…
இறங்கும் நேரம் வந்து விட- அன்று
இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு
இயற்கை என்று ஒன்றும் இல்லை…
மணல் நகரின் அனல் காட்சி
இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி…
அன்று நிவாரணம் தேடி வந்த நகரம்
இன்று நிரந்தரம் ஆகிப்போன நகரம்,
நாள் விடிந்தாலும் முடிந்தாலும்
ஒரே போல இருக்கும்,
அட அறைக்குள்ளே சிறைவைத்தால்
வேறென்ன இருக்கும்…
உறவோடு உறவாட
தொலைபேசி எனக்கு,
அதில் போன காசுக்கு
இங்கேது கணக்கு…
இங்கே மனைவியோடு உறவாடி
பிள்ளை பெறமுடியாமல்,
பில்லை பெற்றவர் ஆயிரம்…
இளமையும் வேலைக்கு
இரையாகி போச்சு,
காலமும் காசுக்கு
கரியாகி போச்சு,
தலையெல்லாம் அதற்குள்ளே
நரையாகி போச்சு,
காசாவது மீந்ததா
செலவாகி போச்சு…
வருமானம் வருமுன்னே
செலவு வந்து சேர்ந்திடும்,
வெறுமாக ஊர் சென்றால்
உறவு வந்து சேருமா?
காசுக் கணக்குகள்
கவலை தருகிறது,
கடந்த காலம்தான்
கண்ணில் வருகிறது…
இனி இஷ்ட்டப்பட்டாலும்,
கஷ்ட்டப்பட்டாலும்,
நஷ்ட்டப்பட்டது திரும்பாது…
எந்நாடு சென்றாலும்
என் நாடு ஆகாது,
சொர்கமே தந்தாலும் மனதில்
தாய் நாடு சாகாது…
kadayanallur.org
No comments:
Post a Comment
welcome